More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வெள்ளத்தில் மிதக்கும் கேரளா மக்களுக்கு உதவ மத்திய அரசு!
வெள்ளத்தில் மிதக்கும் கேரளா மக்களுக்கு உதவ மத்திய அரசு!
Oct 18
வெள்ளத்தில் மிதக்கும் கேரளா மக்களுக்கு உதவ மத்திய அரசு!

கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் தேவைப்படும் மக்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிவிட் செய்துள்ளார்.



தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு ஆறுகள், அணைகள், ஏரிகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பல மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும்,  திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.



கேரளாவில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக நேற்று முன்தினம் வரை 15 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் 6 உடல்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது. கேரள  முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: மழைக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பொதுமக்கள் எடுக்க வேண்டும்.



மாநிலம் முழுவதும் 105 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல முகாம்கள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய உள்துறை அமித் ஷா டிவிட்டரில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவின் சில பகுதிகளில் நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து  வருகிறோம். தேவைப்படும் மக்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ என்.டி.ஆர்.எப். குழுக்கள் ஏற்கனவே அனுப்பட்டுள்ன. அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்ததனை செய்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar01

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பூஜ

Jun27
May09

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோ

Jun19

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப

Sep20

வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்

Feb04

சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என

Jan31

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெல்ஹார் பகுத

Sep05

முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (

Mar14

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

Feb04

சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை

Sep01

தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றா

Sep08

இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக

Oct10

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகு

Sep21

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளும

Jan30

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ந