More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அன்றும், இன்றும், நாளையும் எனது நிலைப்பாடு ஒன்றேயாகும் – மைத்திரி...
அன்றும், இன்றும், நாளையும் எனது நிலைப்பாடு ஒன்றேயாகும் – மைத்திரி...
Nov 12
அன்றும், இன்றும், நாளையும் எனது நிலைப்பாடு ஒன்றேயாகும் – மைத்திரி...

விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவேன் எனவும் மூன்று வீடுகளை இணைத்து அமைக்கப்பட்ட வீட்டில் தான் வசிப்பதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த கருத்துக்கள் முற்றிலும் பொய் எனவும், அவற்றை முற்றாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்த போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.



அதன்போது அவர் மேலும் கூறுகையில்,



கடந்த செவ்வாய்க்கிழமை எனது நண்பரான அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, எனது பெயரை கூறி கருத்து வெளியிட்டிருந்தார்.



அதன்போது அவர், நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைச்சர்களுடன் விஸ்கி குடித்துக்கொண்டு செயற்பட்டதாக கூறியுள்ளார். அந்தக் கருத்தை நான் நிராகரிக்கின்றேன்.



இந்த நாட்டில் என்னைப்பற்றி அறிந்த அனைவருக்கும் தெரிந்த விடயமாக நான் சிகரட் மற்றும் மதுபானத்தை நிராகரிப்பவன் என்பதுடன், போதைப் பொருட்களுக்கு எதிராக அதிக நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் ஆகும். அன்றும், இன்றும், நாளையும் எனது நிலைப்பாடு ஒன்றேயாகும்.



இதேவேளை நான் ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பின்னர் மூன்று வீடுகளை ஒன்றிணைந்து அதில் வசிப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. நான் இருக்கும் உத்தியோகபூர்வ இல்லமானது தற்போதைய சுகாதார அமைச்சர் இருந்த வீடாகும். நான் அங்கு செல்ல முன்னர் அவரே அங்கு இருந்தார்.



ஜனாதிபதி உரித்து சட்டத்திற்கமைய ஜனாதிபதியொருவர் பதவிக்காலம் முடிந்த பின்னர் அவருக்கு வழங்கப்படக் கூடிய சலுகைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.



இந்நிலையில் நான் இருக்கும் வீட்டில் இரண்டு வீடுகளை இணைத்து அங்கு, முன்னாள் ஜனாதிபதியான டீ.பி விஜேதுங்க இருந்துள்ளார். இதனை தவறாக புரிந்துகொண்டே தற்போது நான் மூன்று வீடுகளை இணைத்து அமைத்துள்ளதாக கூறியுள்ளனர். அவர் வளர்த்த மரங்களே இப்போது இருக்கின்றது. அது பழைய வீடே. வெளியில் அழகாக தெரிந்தாலும் உள்ளே அப்படி இல்லை.



அமைச்சர் கூறுவதை போன்று நான் மூன்று வீடுகளை இணைத்த வீட்டை அமைத்திருப்பதாக உறுதிப்படுத்தினால் நான் எந்த நேரத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த விலகுவதற்கு தயாராக இருக்கின்றேன். எந்தவொரு நிறுவனத்திற்கும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தலாம்.



டீ.பி விஜேதுங்க இரண்டு வீடுகளை அமைத்துக் கட்டியுள்ளார். அத்துடன் கெஹலிய ரம்புக்வெல்ல மேலதிகமாக ஒரு பகுதியை இணைத்து இருந்தார். அவர் ஊடக சந்திப்புக்காக அதனை செய்திருந்தார். இதனை நான் செய்யவில்லை என்றார்.



இதேவேளை இது தொடர்பில் சபையில் கருத்து கூறிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இது தொடர்பான தகவல்களை இப்போதே அறிந்துகொண்டேன். நான் இந்த விடயம் தொடர்பில் விரிவான உரையொன்றை பின்னர் செய்கின்றேன் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul18

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள

Sep19

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட

Oct13

யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும

Apr13

எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி

Jun06

நாட்டில் உள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள்,  வெளிச்ச

Jan25

இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம்  செய்வதற்கு எ

Oct07

வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க

Jul14

வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா

Mar12

எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப

Jul07

காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத

Oct06

இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித

Mar06

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய க

Jan27

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை அ

Sep21

இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத

Jun29

எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசா