More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 18 அரசுப் பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெறுகிறது!
18 அரசுப் பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெறுகிறது!
Dec 19
18 அரசுப் பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெறுகிறது!

கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக 18 அரசுப்பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெறுவதாக ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார். 



நெல்லையில் தனியார் பள்ளி கழிவறைச் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் சிதிலமடைந்து காணப்படும் பள்ளிகளை இடிக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. 



இந்த நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.  பின்னர் பேசிய ஆட்சியர்,  கரூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் என மொத்தம் 1072 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக 18 அரசுப்பள்ளிகளில் 20 கட்டடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.



மேலும், தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் நடடிவக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்த ஆட்சியர் பிரபுசங்கர், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கட்டிடங்களை அத்துறை சார்ந்த அலுவலர்களும், ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள கட்டிடங்களை அதே துறை சார்ந்த அலுவலர்களும் தொடர்ந்து கண்காணித்து தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிலித்தார். இந்த ஆய்வின்போது, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப

Jul17

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ப

May14

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்

Jun22

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்

May12

ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ

May28

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான

May21

இலங்கை வசமுள்ள படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இராம

Aug18

ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை

Dec27

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்

Dec30

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றா

Apr02

துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்ன

Mar16

மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர்

Mar28

டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய

Mar13

சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை

Jun23

சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட