2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகியவை நடைபெறும் நாட்களில் மாற்றம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேரா தெரிவித்துள்ளார்.
உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகஸ்ட் 2022 இல் நடத்தப்பட உள்ளன.
எனினும் இவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை இந்த வருடம் பெப்ரவரி 7ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேரா கூறினார்.