இலங்கை மின்சார சபைக்கு 1500 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். எனினும் எரிபொருள் இருப்பு இன்னும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் எரிபொருள் இருப்பு இருந்தால் மின்சார சபைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.