More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இருளில் மூழ்க போகும் இலங்கை..
இருளில் மூழ்க போகும்  இலங்கை..
Jan 19
இருளில் மூழ்க போகும் இலங்கை..

மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதக்க செய்திகள் வெளியாகியுள்ளன.



களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான டீசல் பற்றாக்குறை காரணமாக அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பிரிவின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்சார துண்டிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது .குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் பாதிப்பு காரணமாகத் தேசிய மின் கட்டமைப்பில் 165 மெகாவோட் மின்சாரத்திற்கான பற்றாக்குறை நிலவுகின்றது.



அதேசமயம் எரிபொருள் இன்மையால் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று மதியம் தடைப்பட்டன. எவ்வாறாயினும் 900 மெற்றிக் டன் உலை எண்ணெய் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



இதேவேளை, இன்று இரவு 10 மணிக்குள் சப்புகஸ்கந்த டீசல் மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான டீசல் கிடைக்கப்பறாவிட்டால் நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்படையக்கூடும் என மின்சார பொறியியலாளர் தெரிவிக்கின்றனர்.



அதன்படி, சப்புகஸ்கந்த டீசல் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்படையுமாயின் தேசிய மின் கட்டமைப்பில் மேலும் 150 மொகாவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





 

அவ்வாறு ஏற்படுமாயின் சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கும் அதிக காலம் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep25

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Jan28

இந்த அரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்ட

May28

எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வ

Jan11

விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சா

Oct04

அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள

Oct22

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்

Feb02

யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களிலுள்ள தம

Mar12

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று

Jan20


 இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு

Sep20

நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா

May26

இன்று விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள்

Sep27

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்

Apr08

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேச

May03

மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்த

Apr26

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அ