More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி...
உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி...
Aug 30
உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி...

உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எங்களுக்கு ஒருதுளியேனும் நம்பிக்கை இல்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.



சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இன்று தம்பிலுவில் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார்.



அவர் மேலும் குறிப்பிடுகையில்.



காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய எமது போராட்டம் கொவிட் -19 காரணமாக வீதியில் நின்று கேட்க முடியாத நிலைக்கு பின் தள்ளப்பட்டுள்ளோம். 



12 வருடமாகியும் சுற்றிவளைப்பின் போதும் , வீடு வீடாக பிடித்து செல்லப்பட்ட , யுத்தத்தின் போது ஒப்படைக்கப்பட்ட எத்தனையோ உறவுகளை இன்று இழந்து நிற்கின்றோம் . உலக வரலாற்றில் தமிழர்களாகிய நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளோம்.உறவுகளை இழந்து தாங்கமுடியாத உயிர் வலியில் உள்ளோம். உறவுகளை தேடிய போராட்டத்தில் நூற்றிற்க்கு மேற்பட்ட பெற்றோரை இழந்துள்ளோம் இந்த நிலை இனியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எட்டு மாவட்ட உறவுகளுக்கு ஏற்படக்கூடாது. 



ஒன்றுமில்லாத ஓ எம் பி காரியாலயத்தை இரவோடு இரவாக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைத்துள்ளனர் 48 ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கையை காப்பாற்றவே கிளிநொச்சி மாவட்டத்தில் அமைத்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் . சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் புலனாய்வு பிரிவினரால் பல கெடுபிடிகளுக்கு ஆளாகியுள்ளோம். 



உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எங்களுக்கு ஒருதுளியேனும் நம்பிக்கை இல்லை . சர்வதேத்தையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையுமே நம்புகின்றோம். எமது பிரச்சினை தீரும் வரை எமது போராட்டம் தொடரும் என குறிப்பிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct02

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட

Jul14

ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு செ

Oct14

நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்க

Oct23

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு

Feb08

இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 27 அத்தியாவசிய பொ

Oct16

56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை

Mar07

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில

May04

இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை

Feb05

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட

Jun09

அமைச்சரவை அனுமதி

ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்

Feb05

கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தி

Aug18

புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இ

Apr08

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை கூ

Sep22

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து

Sep15

நாட்டில் எதிர்வரும் காலங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏ