More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொலை செய்த மனைவி கைது!
கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொலை செய்த மனைவி கைது!
Sep 08
கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொலை செய்த மனைவி கைது!

மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொலை செய்தார்.

 



இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;-



நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்வராணி (40). இவர்களுக்கு 15 வயதில் மகனும், 16 வயதில் மகளும் உள்ளனர். தங்கராசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.



இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2-ந் தேதி மாலையில் தங்கராசு மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. அப்போது மனைவியிடம் அவர் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.



இதற்கிடையே சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் வைத்து செல்வராணி சூடுப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது தங்கராசு தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராணி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை பாத்திரத்துடன் தூக்கி தங்கராசு மீது ஊற்றியதாக தெரிகிறது.



இதில் தங்கராசு உடல் வெந்து வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தங்கராசுவை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



இதற்கிடையே நாமக்கல் 2-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு கபாலீசுவரன், தங்கராசுவிடம் வாக்குமூலம் வாங்கினார். அப்போது குடும்ப தகராறில் தன்னுடைய மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக அவர் கூறினார்.



இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் தங்கராசு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நாமக்கல் போலீசார் செல்வராணி மீது கொலை வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.



போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று மதுபோதையில் செல்வராணியை தங்கராசு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராணி, கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றியதும், காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்ததும் தெரியவந்தது. இருந்தாலும் கொலைக்கான காரணம் வேறு ஏதாவது இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.



கணவரை கொதிக்கும் எண்ணெயை ஊற்றி பெண் கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug10

தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பா

Nov09

இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத

Jun09

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பாராஸ் என்ற தனியார் ஆஸ்

Jan28

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி

Aug05

சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம

Feb06

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கண

Feb27

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந

Jun16

சீனாவில் 2019 இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உ

Apr04

அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல்

Sep17

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனை

Jan19

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய ச

Jan23

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெ

May24

கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட

May04

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

Mar04

ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்