More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • எந்த நேரத்திலும் நிலைமை மோசமாகலாம் – கெஹலிய ரம்புக்வெல
எந்த நேரத்திலும் நிலைமை மோசமாகலாம் –  கெஹலிய ரம்புக்வெல
Sep 09
எந்த நேரத்திலும் நிலைமை மோசமாகலாம் – கெஹலிய ரம்புக்வெல

இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.” இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஊடகங்களிடம் தெரிவித்தார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



“பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் கடந்த காலத்தை விடவும் குறிப்பிட்ட அளவு ஆரோக்கியமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. புதிய வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.



எனினும், மக்களின் செயற்பாடுகளில் முழுமையான திருப்தி இல்லை. இலக்கை நோக்கி எம்மால் பயணிக்க முடிந்த போதிலும் இலக்கைத் தக்கவைக்க முடியவில்லை. அதற்கு மக்களின் செயற்பாடுகளே காரணமாகும்.



மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே எம்மால் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.



சுகாதார அமைச்சு, சுகாதாரப் பணியகம் மூலமாக பல்வேறு சுகாதார வழிகாட்டிகள், கட்டுப்பாட்டு வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் மக்கள் அதனை முழுமையாகப் பின்பற்றுவதில் சந்தேகம் உள்ளது. ஒரு சிறிய குழு தவறு செய்கின்றது.



இதனால் பெருமளவிலான மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதை சகலரும் கவனத்தில்கொள்ள வேண்டும். இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.



ஆனால், எப்போதும் மீண்டும் மோசமான கொரோனாத் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரியுடன் போராடுகின்றோம் என்பதை சகலரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr03

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்ற

Mar05

நுவரெலியா - லபுக்கலை பகுதிக்கு  மரக்கறி ஏற்றச் சென்ற

Sep24

இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்

Jul17

நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்

Mar08

இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதி

Jul20

மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து

May17

பொகவந்தலாவ பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட 10கிராம உத்தி

Jun18

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க

Feb10

 கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா

Apr03

புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகார

Oct17

வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங

Oct11

மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக

Jan13

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ

Dec27

75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர

Feb11

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா