More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இறப்புக்கள் தடுப்பூசி எதுவும் போடாதவர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது-ஆ. கேதீஸ்வரன்!
இறப்புக்கள் தடுப்பூசி எதுவும் போடாதவர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது-ஆ. கேதீஸ்வரன்!
Sep 13
இறப்புக்கள் தடுப்பூசி எதுவும் போடாதவர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது-ஆ. கேதீஸ்வரன்!

வடமாகாணத்தில் தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும்

பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 547,150

பேருக்கு 1வது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்



மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது



இது வடமாகாணத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்களில்85வீதம்ஆகும். மேலும் 2வது தடுப்பூசி 401 ,494 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 30 வயதிற்குமேற்பட்டவர்களில் 62வீதம் ஆகும். வடமாகாணத்தின் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ100,000 பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை.





கடந்த ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதி முதல் வடமாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும்

இறப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. வடமாகாணத்தில் இதுவரை மொத்தமாக 32,844

தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.



இவர்களில் 14,480 தொற்றாளர்கள் கடந்த ஓகஸ்ட்மாதத்திலும் 5,847 தொற்றாளர்கள் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களிலும்இனங்காணப்பட்டுள்ளனர்.



இதேபோல வடமாகாணத்தில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை மொத்தமாக 578

இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டடுள்ளன. இவற்றில் 228 இறப்புக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்திலும் 169

இறப்புக்கள் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இறப்புக்களை ஆராயும்போது பெரும்பாலான இறப்புக்கள் தடுப்பூசி

எதுவும் போடாதவர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது.



தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம்கொவிட் தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தையும் இறப்புக்களையும் குறைக்கக்கூடியதாக இருக்கும்.எனவே தற்போது ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான பெருந்தொற்று சூழலிலே உயிரிழப்புக்களை குறைப்பதற்கு எம்மிடமுள்ள முக்கியமான உபாயம் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதே. தற்பொழுது

வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை

தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரையும் உடனடியாக சென்று தடுப்பூசியை

பெற்றுக்கொள்ளுமாறு வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.-என்றார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul27

பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய

Jan29

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்

Mar06

கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ

Oct08

இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகள

Feb09

பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்

Jun09

எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்

Jul19

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூச

Sep30

மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்தத

Jan25

தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்   

Apr30

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இந்த அரசு

Jan27

யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள

Feb02

 

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ

Apr23

பிரதமர் மகிந்த ராஜபக்ச எவ்வேளையிலும் பதவி விலகுவதற்க

Feb09

சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர

Oct04

அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள