தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நயன்தாரா. ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா கடந்த 16 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நாயகி என்றால் அது நயன்தாராதான்.
இடையில் சில காலம் சொந்த பிரச்சனைகள் காரணமாக நடிப்பில் இருந்து விடுப்பு எடுத்தாலும் மீண்டும் தமிழ் சினிமாவில் ரிட்டர்ன் கொடுத்து தற்போது பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா. கதாநாயகியாக மட்டுமில்லாமல் பல படங்களில் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் நயன்தாரா.
அந்த வகையில் இவர் நடித்த மாயா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கண்டது. கடந்த 2015 விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் பொது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.