More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் - அமெரிக்க அதிபர் தகவல்!
உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் - அமெரிக்க அதிபர் தகவல்!
Feb 19
உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் - அமெரிக்க அதிபர் தகவல்!

ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும் போது, ‘உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.



மேலும் படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் மீது படையெடுக்க ரஷிய அதிபர் முடிவு செய்துவிட்டார் என்று ஜோபைடன் தெரிவித்துள்ளார்.



அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜோபைடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது



ரஷிய படைகள் உக்ரைனை வரும் நாட்களில் தாக்க திட்டமிட்டுள்ளன என்று நம்புவதற்கு எங்களுக்கு காரணங்கள் உள்ளது. உக்ரைன் மீது படையெடுக்க ரஷிய அதிபர் புதின் முடிவு செய்துவிட்டார்.



அமெரிக்க உளவுத்துறையின் கணிப்புபடி இந்த தாக்குதலில் கீவ் நகரம் குறி வைக்கப்படும். ரஷிய படை வீரர்கள் சுமார் 1.90 லட்சம் பேர் உக்ரைன் எல்லையிலும் அதற்கு அருகிலும் குவிக்கப்பட்டு உள்ளனர். ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் ரஷிய படைகள் குவிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்கா கணித்துள்ளது.



உக்ரைன் மீது படையெடுப்பதற்காக ரஷியா தவறான தகவல்களை அளித்துள்ளது. ரஷிய மக்களுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் அதிபர் முனிச்சில் நடக்கும் பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்பது அவரது விருப்பம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறுவது புத்தி சாலித்தனமாக இருக்காது.



இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷிய படைகளின் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் குவிக்கப்பட்டு தாக்குதலுக்காக தயார் நிலையில் உள்ளனர். உக்ரைன் மீது படையெடுக்க ரஷியா வேண்டும் என்றே சில சம்பவங்களை தூண்டி விடலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar22

உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ப

May11

இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெர

Apr14

அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ

Aug27

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்

Sep23

தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோ

Mar14

போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நா

Mar10

உக்ரைன் வான் வெளியை உடனடியாக மூடுங்கள் என முன்னாள் மி

May08

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்ட

Mar07

உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து

Oct10

நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான அனம்ப்ராவில் படகு

Sep23

சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்

Jun18

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Apr02

இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்வ

Apr12

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐர

May28

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்