More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • உக்ரைனின் மனிதப் பேரவலத்தை சோகத்தை முள்ளிவாய்க்காலில் கண்டோம்!
உக்ரைனின் மனிதப் பேரவலத்தை சோகத்தை முள்ளிவாய்க்காலில் கண்டோம்!
Feb 25
உக்ரைனின் மனிதப் பேரவலத்தை சோகத்தை முள்ளிவாய்க்காலில் கண்டோம்!

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என பிரித்தானியாவின் கென்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவுக் குழுவின் தலைவருமான Tom Tugendhat குறிப்பிட்டுள்ளார்.



உக்ரைனின் மனிதப் பேரவலத்தை, சோகத்தை முள்ளிவாய்க்காலில் கண்டோம்” பிரித்தானியாவின் கென்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவுக் குழுவின் தலைவருமான Tom Tugendhat, உக்ரைனில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் காட்சிகளை "ஒரு மனித சோகம்" ("a human tragedy".) என விபரித்திருக்கிறார்.



ரஷ்யாவினதும் விளாடிமிர் புடினினதும் ஒரு “நிர்வாணகரமான” ஆக்கிரமிப்பால் வெளியேற்றப்பட்ட மக்களின் இந்த நெடுவரிசைகளைப் பார்ப்பது பயங்கரமானதும் மிகவும் வேதனையானதும் ஆகும் எனக் கூறும் Tom "குடும்பங்கள் பிரிந்து கிடப்பதையும், பிரிந்து வாழ்வதையும் பற்றி நாம் மிகத் தெளிவாக சிந்திக்க வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.



உண்மைதான் Tom. யுத்தம் எவ்வளவு கொடியது. கொத்துக்கொத்தாக மக்கள் இடம்பெயர்க்கப்படுவதும், வாழ்விடங்களை விட்டு, அவர்கள் தமது குழந்தைகள், செல்லப்பிராணிகளுடன் நகர்வதும், போரில் கேட்பாரின்றி அனாதைகளாக மடிவதும் எவ்வளவு மனிதப் பேரவலம் என்பதை, நீங்கள் எல்லோரும் பார்த்திருக்க, நாம் அனுபவித்தோம் Tom.



அந்த துயர் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறையப் போவதில்லை. அந்தக் கொடுமையை, உக்ரைனின் அப்பாவி மக்கள் மட்டும் அல்ல உலகில் யுத்தங்களை எதிர்கொள்ளும் எந்த மக்களும் அனுபவிக்கக் கூடாது.



30 வருடகால யுத்தத்தில் நாம் அனுபவித்ததை இனி எவரும் அனுபவிக்கக் கூடாது. யுத்தம் நிலவிய, நிலவுகின்ற நாடுகளில் அப்பாவி மக்கள் அனுபவித்த, அனுபவிக்கும் கொடூரங்கள் இல்லாது ஒழிய வேண்டும்.



ஆதிக்கப் போட்டிகளுக்கும், சாம்ராஜ்ய விரிவாக்கலுக்கும், வளச் சுறண்டல்களுக்கும், நில, பொருளாதார ஆக்கிரமிப்புகளுக்கும், இன, மத, காலாசார மேலாதிக்கங்களை நிறுவுவதற்காகவும், ஒவ்வொரு கணமும் உலகில் மக்கள் மரித்துக் கொண்டிருக்கும் நிலை மாற வேண்டும்.



ரஸ்ய உக்ரைன் போர் ஒரு 3ஆம் உலகப் போராக மாறுவதனை உடன் தடுத்து நிறுத்த வேண்டும். உலக அமைதியை நோக்கி, யுத்தமில்லா வாழ்வை நோக்கி உலகம் ஒன்றுபட வேண்டும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb08

சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர

Mar04

உக்ரைனை ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில்

Feb15

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி

Mar03

நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ

Feb10

பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர

Mar04

உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்

Mar04

உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா

Mar04

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு

Feb07

பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த

Mar02

உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர

Feb27

 வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்

Mar08

Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ

Feb27

உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி

Mar08

இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ

Mar09

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,