More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சர்ச்சையில் சிக்கிய கம்பவாரிதி
சர்ச்சையில் சிக்கிய கம்பவாரிதி
Jan 24
சர்ச்சையில் சிக்கிய கம்பவாரிதி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்துவ பயிற்சியை வழங்கலாம் என கூறிய கம்பவாரிதி இராணுவத்திற்கு வெள்ளையடிக்கும் வேலையை செய்கிறார். என யாழ்.பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் வசந் கண்டனம் தெரிவித்தார்.



கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்த கருத்து தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கத்தில் அரசியல் , சிவில் செயற்பாடுகள் மற்றும் பல்கலைக்கழகம் போன்றவற்றில் இராணுவ தலையீடுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகள் போராடி வரும் நிலையில் இராணுவ முகாமில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை வழங்குவதை வரவேற்று கருத்து தெரிவித்திருப்பது எமக்கு மன வேதனையைத் தருகிறது.



கொத்தலாவல இராணுவப் பல்கலைக்கழகத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு எதிராக இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் என்பன ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் கம்பவாரிதியின் கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.



கம்பவாரிதி பல்கலைக்கழக மாணவர்களின் தலைமைத்துவம் தொடர்பில் தெரிவித்த கருத்தையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம் ஏனெனில் பல்கலைக்கழகங்களில் தலைமை தாங்குபவர்களை அச்சுறுத்துவதும் அழுத்தங்கள் மூலம் அவர்களை அதிலிருந்து விலக்கிவைக்கும் செயற்பாடு அதிகம் இடம்பெற்று வருகிறது.



இதற்கெல்லாம் அறியாதவர்கள் போல் கற்றறிந்த சமூகத்தில் இருப்பவர்கள் தெரிவித்த கருத்து பல்கலைக்கழக மாணவர்களை கொச்சைப்படுத்துவதாகவே பார்க்கிறோம். தலைமைத்துவம் ஏன் எமது சமூகத்தில் குறைவடைந்து செல்கின்றது என்பதை முதலில் அவர் ஆழமாக ஆராய வேண்டும்.



ஆகவே கம்பவாரிதியின் கருத்து தொடர்பில் ஏனைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்களுடன் கலந்துரையாடி எதிரான போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய

Jul24

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட

Mar13

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு

Oct07

வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க

Apr02

இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித

Apr01

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர்  இராயப்பு யோச

Sep03

யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப

Mar08

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம

Mar29

இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட

Feb17

தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர்  இன்று (16) ப

Mar15

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட

Jan21

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி

Sep24

கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடை

Dec12

நாட்டின் சில பிரதேசங்களில் 8 மணித்தியாலங்களுக்கு நீர்

Mar12

வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட