More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வெறிச்சோடிய வீதிகள்! யாழில் விஸ்தரிக்கும் போராட்டம்! - பொலிஸார் குவிப்பு
வெறிச்சோடிய வீதிகள்! யாழில் விஸ்தரிக்கும் போராட்டம்! - பொலிஸார் குவிப்பு
Feb 01
வெறிச்சோடிய வீதிகள்! யாழில் விஸ்தரிக்கும் போராட்டம்! - பொலிஸார் குவிப்பு

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் வலைகளே இவ்வாறு அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.



அதனை கண்டித்து மீனவர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் படகுகளை , வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அதனால் அவ் வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தாம் வீதியை மறித்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பில் மீனவர்கள் மேலும் தெரிவிக்கையில்,



தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றன. மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தோம். பல கட்டங்களாக போராட்டங்களை முன்னெடுத்தோம்.



இது எதற்குமே பயனில்லை. மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. அவர்களை கட்டுப்படுத்தவோ அவர்களை தடுத்து நிறுத்தவோ எவரும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை.அத்துமீறி எமது எல்லைக்குள் நுழையும் மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை விரட்டியடிக்க எம்மால் முடியும். ஆனால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டும், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கூடாது என்ற எண்ணத்திலையே நாம் பொறுமை காக்கிறோம்.



அத்துமீறும் மீனவர்களை , அவர்களின் படகுகளுடன் சிறைப்பிடித்து எமது கரைக்கு கொண்டு வரவும் எம்மால் முடியும். எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.



அதேவேளை , எமது பிரச்சனைகள் தொடர்பில் இந்தியா கரிசனை கொள்ளாவிடின் நாம் சீனாவின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்.



கடற்தொழில் அமைச்சர் இது தொடர்பில், நடவடிக்கை எடுக்க முடியாவிடின் அவர் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதே சிறந்தது எனவும் மீனவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர். 



யாழ்ப்பாணத்தில் வீதியை மறித்து மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.



இதன்போது அனைத்து வீதிகளையும் மறித்து போராட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பருத்தித்துறை வீதிகளும் மூடப்பட்டுள்ள நிலையில் வெறிச்சோடி காணப்படுகின்றன.

 



GalleryGallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan28

கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வ

Feb04

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்களாக அடையாள

Jun12

முதலாவது செய்தி

தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட

Sep27

அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன

Feb17

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் த

May01

கொவிட்-19 நோய்த்தொற்றினால், உலகில் மிகவும் சவாலுக்கு உள

Sep19

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட

Jan25

நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்

Feb05

யாழ். நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் பத்திக் மற

Sep26

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரத

Jul30

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப

Jun05

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவ

Feb12

நீதிமன்ற கட்டமைப்பு அனைத்தையும் டிஜிட்டல் மயப்படுத்

Mar05

கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா

Jan26

கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில், பாடசாலை மாணவி