More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நேற்றைய தினம் இலங்கையை உலுக்கிய கோர விபத்து - நான்கு உயிர்கள் பலி
நேற்றைய தினம்  இலங்கையை உலுக்கிய கோர விபத்து - நான்கு உயிர்கள் பலி
Feb 02
நேற்றைய தினம் இலங்கையை உலுக்கிய கோர விபத்து - நான்கு உயிர்கள் பலி

பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் பூஸ்ஸ வெல்லபட புகையிரத கடவையில் முச்சக்கரவண்டி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நேற்று காலை உயிரிழந்துள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.



இந்த கோர விபத்தில் புஸ்ஸ பழைய வீதியை சேர்ந்த காலிங்க ஜினதாஸ எனப்படும் 85 வயதுடைய தந்தையும், காலிங்க சுனிமல் என்ற 46 வயதுடைய மகனும், மகனின் மனைவியான லசிக்கா குமார என்ற 48 வயதுடையவரும், லசிக்காவின் தாயாரான 83 வயதுடைய எமிஸ்ஹாமி என்பவருமே உயிரிழந்துள்ளனர்.



உயிரிழந்த நால்வரும் கிராம சேவகரை சந்திப்பதற்காக சென்று வீடு திரும்பிய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



இந்த ரயில் வீதிக்கு பாதுகாப்பு கடவை ஒன்று இல்லை எனவும், அந்தப் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை எனவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.



மகனால் முச்சக்கர வண்டி ஓட்டப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கடவை இல்லாமையினால் பாதுகாப்பற்ற ரயில் வீதி ஊடாக பயணித்த போது ரயிலில் முச்சக்கர வண்டி மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.



இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அனைவரும் வீசப்பட்ட நிலையில் கிடந்தனர். பாதுகாப்பு கடவை இருந்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. 



அண்மைக்காலமாக இலங்கையில் விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பயணங்களை மேற்கொள்ளும் சாரதிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr04

இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும

Jul15

நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அ

Oct23

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு

Feb07

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு

Aug18

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற

Feb04

பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப

Oct04

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி

Oct14

தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்

Sep22

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் ப

Sep17

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில

Apr07

அச்சுவேலி - வளலாயில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து

Feb12

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று

Sep16

யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள

Jan18

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட

Jul11

இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட