More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இவற்றில் ஒன்றை தினமும் செய்து வந்தாலே போதும்....
 சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இவற்றில் ஒன்றை தினமும் செய்து வந்தாலே போதும்....
Feb 02
சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இவற்றில் ஒன்றை தினமும் செய்து வந்தாலே போதும்....

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால் அனைவரும்  அதிக அளவில் வருந்துகிறார்கள்.

அந்தவகையில் சரும நிறத்தை எளியமுறையில் அதிகரிக்க கூடிய ஒரு சில இயற்கை வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.    



உங்கள் முகத்தில் உள்ள கருமையைப் போக்க 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை போட்டு வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.



உங்களுக்கு பருக்கள் அதிகம் வருமாயின், இந்த ஃபேஸ் பேக் சரியாக இருக்கும். இதற்க 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, பேஸ்ட் செய்ய சிறிது நீர் அல்லது பாலை ஊற்றி கிளற வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.



ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால், 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின், நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டாலே நல்ல மாற்றம் தெரியும்.



2 டீஸ்பூன் தேனில், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதோடு 3-5 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் சருமத்தை வெள்ளையாக்குவதோடு, பிம்பிள் பிரச்சனையையும் போக்க வல்லது.



ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து கழுவ வேண்டும். இப்படி இரவு முழுவதும் ஊற வைத்தால் தான் முகம் நன்கு பொலிலோடு ஜொலிக்கும். முகத்தில் உள்ள மஞ்சள் கறை நீங்க, கடலை மாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதைக் கொண்டு முகத்தைத் தேய்த்து கழுவுங்கள். இதனால் சரும நிறம் மேம்படும். இந்த மாஸ்க் வறட்சியான சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் முகப்பரு அதிகம் வரும் சருமத்திற்கு மிகவும் நல்லது.



1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1 மணிநேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இப்படி மாலை வேளையில் தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். விருப்பமுள்ளவர்கள், இந்த மாஸ்க்கை இரவு முழுவதும் ஊற வைத்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.   

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar28

இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிக

Feb06

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்

Sep22

நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்கள

Jan22

சமையலில் பயன்படும் பூண்டில் பல வகையான ஆரோக்கிய நன்மைக

Mar04

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இந்தியாவில் அதிக

Mar22

வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

Feb04

நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறை

Feb07

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்

Mar07

நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும

Jan29

சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது ஒரே இடத்திலேய

Feb14

பொதுவாக கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்

Oct22

முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால

Mar15

குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இத

Feb07

பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை விட உலர்ந்

Mar22

பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமு