More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மீனவர் போராட்டத்திற்கு சுமந்திரன்- சாணக்கியன் ஆதரவு; டக்ளஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்...
மீனவர் போராட்டத்திற்கு சுமந்திரன்- சாணக்கியன் ஆதரவு; டக்ளஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்...
Feb 03
மீனவர் போராட்டத்திற்கு சுமந்திரன்- சாணக்கியன் ஆதரவு; டக்ளஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்...

தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது, சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரமான தீர்வு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில் இடம்பெற்ற மீனவர்கள் உயிரிழப்புக்கு நீதி ஆகியவற்றை கோரி தொடங்கப்பட்ட போராட்டம் 4ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்துள்ளனர்.



இதன்போது மீனவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் எனவும், இது சட்டவிரோதமான போராட்டம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், மீனவர்களின் போராட்டத்திற்கு தங்களது ஆதரவு எப்போதும் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.



இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr23

பிரதமர் மகிந்த ராஜபக்ச எவ்வேளையிலும் பதவி விலகுவதற்க

Jan17

கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு

Sep24

68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின்

Jan11

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவின

May03

நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழ

Feb01

கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீத

Aug10

ரிஷாட் பதியுதீனை அவருக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வ

Oct01

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இ

Apr06

பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சி

Jan19

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு

Feb21

நாளைய தினமும் மின்வெட்டு  நடைமுறைப்படுத்தப்படும் எ

Jan20

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்

Sep12

நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின

May03

அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம

Jun17

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்