More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாடளாவிய ரீதியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! பாதுகாப்பு தீவிரம்
நாடளாவிய ரீதியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! பாதுகாப்பு தீவிரம்
Feb 04
நாடளாவிய ரீதியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! பாதுகாப்பு தீவிரம்

இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



இதற்கமைய,கொழும்பின் பல பகுதிகளில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளிலும்,ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.



இன்றை தினம் இடம்பெறவுள்ள 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பாதுகாப்பிற்காக 3000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பு மாநகரம் மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்பு திட்டமொன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.



இதேவேளை, இன்றைய தினம் பெப்ரவரி 04ம் திகதி 21 வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அந்த வீதிகளுக்கு மாற்றுப் பாதைகளை பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



இதேவேளை, 74 வது சுதந்திர தின அணிவகுப்பை முன்னிட்டு இவ்வருடம் கடற்படையினரின் 25 சல்யூட் ஷாட்கள் மற்றும் விமானப்படையினரால் விமானக் கண்காட்சி நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



இதன்படி, விழா நடைபெறும் நாடு சார்பில் காலி முகத்திடலில் இருந்து இலங்கை கஜபாகு கப்பலில் இருந்து 25 சல்யூட் ஷாட்கள் வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், முப்படைகளுடன் காலாட்படை இணைந்து 26 விமானங்கள் மற்றும் 50 விமானிகளின் அணிவகுப்பு வான்வெளியில் காட்சியளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct18

2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர

Apr27

சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் த

Feb05

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்

Oct22

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன

Aug10

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதைத் தொ

May27

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை ம

Oct19

இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்

Aug13

கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங்

Feb19

கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக

Jul25

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்

Jan18

ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் ச

Mar12

  சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்

Feb02

பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐந்து மாணவிகள் சுகவீ

Sep21

அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டு

May12

இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பத