More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இன்று முதல் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த நடவடிக்கை
இன்று முதல் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த நடவடிக்கை
Mar 14
இன்று முதல் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த நடவடிக்கை

இன்று முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.



இதற்கான சுற்றுநிருபம், சகல கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேராவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



நாட்டின் நிலையினை கருத்திற்கொண்டு மாணவர்கள் இதுவரை குழுக்களாக பாடசாலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட்டதுடன், 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்பட்டிருந்தனர்.



இதன்போது 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகள் 3 சம பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், இன்று முதல் சகல மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



எதிர்காலத்தில் பாடசாலைகளில் கொவிட்-19 தொற்று பரவல் ஏற்படும் சந்தர்ப்பத்தில், வலய கல்வி பணிப்பாளரின் அனுமதிக்கு அமைய தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct06

இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர

Jan30

நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட

Aug27

தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை ம

Jun17

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய

Jul16

மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்த

May01

நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி

Jul01

யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆர

Jun24

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி

Feb06

கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தா

Oct24

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகர

Jun28

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந

Feb06

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ

Jan19

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந

Sep26

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார வி

Jan19

கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி