More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் இந்தாண்டு நடத்தப்பட போகும் தேர்தல்
இலங்கையில் இந்தாண்டு நடத்தப்பட போகும் தேர்தல்
Mar 14
இலங்கையில் இந்தாண்டு நடத்தப்பட போகும் தேர்தல்

இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இவை இரண்டின் பதவிக்காலமும் முடிந்து விட்டன.



கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முடிவடைந்த உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளூராட்சி சபைகள் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய அவர், அவற்றின் பதவிக்காலத்தை நீடித்தார்.



எனினும் அரசாங்கம் தற்போது அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் உள்ளூராட்சி சபைகளின் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.



எதிர்வரும் செப்டம்பர் மாதம் கட்டாயம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும் என்பதால், 9 மாகாண சபைகளில் வடக்கு, கிழக்கு, மேல், வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் தோல்வியடையும் வாய்ப்புகள் உள்ளன.



இதன் காரணமாகவே அரசாங்கம் முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால், 330 உள்ளூராட்சி சபைகளில் 180 முதல் 190 வரையான சபைகளை கைப்பற்ற முடியும் என அரசாங்கம் நம்புவதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதனடிப்படையில், அரசாங்கத்திற்கு சாதகமான அமையும் வகையில் தேர்தல் முறையிலும் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமி்டுள்ளதாக தெரியவருகிறது.



உள்ளூராட்சி சபை ஒன்றை கைப்பற்ற வேண்டுமாயின் 50 வீதமான உறுப்பினர்கள் தெரிவாக வேண்டும் என்ற வரையறையை 35 வீதமாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May24

நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது

இந்

Mar06

காரைதீவுக் கடலில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ

May03

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால

Jul22

கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர

Jun21

நாட்டில் கொரோனா வைரஸ் தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கு

Jan04

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கை நிதி ந

Mar26

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நி

Oct03

யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வ

Feb11

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற

May03

கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ப

Mar14

வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களி

Sep07

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட

Jul08

அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் ந

Mar05

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும

Sep15

 

காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத