More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நிலைமை ஆபத்தாக மாறும்! இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை
நிலைமை ஆபத்தாக மாறும்! இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை
Mar 19
நிலைமை ஆபத்தாக மாறும்! இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை

மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் பண்டிகை காலத்திற்குப் பிறகு கோவிட் நிலைமை ஆபத்தானதாக மாறும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.



தற்போது நாளாந்தம் பதிவாகும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், மக்கள் பொதுக் கூட்டங்களை ஒழுங்கமைக்கும் போது சுகாதார நடைமுறைகளை மீறினால் எந்த நேரத்திலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.



வரவிருக்கும் பண்டிகை காலத்தை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டாட காத்திருக்கின்றனர்.



இருப்பினும், மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை புறக்கணித்து செயற்பட்டால், பண்டிகை காலத்திற்குப் பிறகு கோவிட் நிலைமை ஆபத்தானதாக மாறும்.



அதற்கிணங்க, குறிப்பாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிற பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் அதில் பங்கேற்பவர்கள் கோவிட் தொற்று பரவும் வகையில் செயற்படாமல் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு

Feb11

நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை கள

Jan25

கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி  தீவக மக்

Mar31

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ

Feb23

தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை

Jul22

கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக

Jan25

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய

Mar05

மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய

Jul25

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்

May12

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர

Jul15

வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ

Jan19

வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ

Sep24

பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய

Feb02

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப

Feb09

நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு