More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை வந்த ரஷ்ய தம்பதியினருக்கு ஏற்பட்ட நிலை! - பல லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு
இலங்கை வந்த ரஷ்ய தம்பதியினருக்கு ஏற்பட்ட நிலை! - பல லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு
Mar 25
இலங்கை வந்த ரஷ்ய தம்பதியினருக்கு ஏற்பட்ட நிலை! - பல லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு

களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெளிநாட்டு பணத்துடன், அவர்களின் பையை திருடிச் சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



கைக்குட்டையால் பாதி இலக்கத் தகடு மூடப்பட்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர், கொள்ளைச் சம்பவத்திற்கு முன்னர் ரஷ்ய தம்பதியினரை பின்தொடர்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



குறித்த நபர் தம்பதியரின் கடவுச்சீட்டுகள் மற்றும் அமெரிக்க டொலர்கள் உட்பட பல வெளிநாட்டு நாணயங்கள் அடங்கிய பையை சந்தேகநபர் திருடியுள்ளார். ரஷ்ய தம்பதியினால் களுத்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.



பொலிஸாரால் பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளில், சந்தேகநபர் தம்பதியினரை சிறிது நேரம் பின்தொடர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், கித்துலாவல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சந்தேகநபர் இருந்த போதே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைது செய்துள்ளனர்.



1335 யூரோக்கள், 1650 அமெரிக்க டொலர்கள் மற்றும் சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் தம்பதியினரின் பையில் இருந்த பல கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மேலதிக விசாரணைகளில் குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதுடன், அவரிடம் போதைப்பொருள் சிலவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct25

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள

Jan18

இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்ட

Apr25

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா

Oct01

யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத

Feb04

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (

Feb11

கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு

Sep26

புலம்பெயர் நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்

Sep24

68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின்

Mar01

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க

Sep23

ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேர

Jan28

அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக

Aug12

நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட

May01

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரத

Mar31

மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்த

Feb03

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்