ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
நீண்ட நாட்களுக்கு பின் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் புதிய ஜெர்சியையும், அறிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி திடீரென விலகியுள்ளார்.
இதனால் ரவீந்திர ஜடேஜா அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மெகா ஏலத்தில் ஜடேஜா தான் முதன்மை வீரராக ரூ.16 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.
இதன் மூலம் இந்த சீசனுடன் தோனியின் கிரிக்கெட் வாழ்கை முடிவுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 