More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் பல இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! அதிர்ச்சி தகவல்
இலங்கையில் பல இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! அதிர்ச்சி தகவல்
Mar 05
இலங்கையில் பல இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! அதிர்ச்சி தகவல்

இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி பாணந்துறை பிரதேசத்தில் பல இளைஞர், யுவதிகளை ஏமாற்றி பணம் பெற்ற நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.



இதேவேளை, கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபரொருவர் பாணந்துறையில் பணம் வசூலிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.



மேலும், இந்த சந்தேக நபர் கனடாவில் வேலை பெறுவதற்கான ஒப்பந்தத்திற்காக சட்டத்தரணியுடன் வருமாறும், வரும் போது 5 லட்சம் ரூபாய் பணமும் கொண்டுவர வேண்டும் எனவும் அவரிடம் வரும் இளைஞர் யுவதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.



அதற்கமைய விசாரணை அதிகாரி ஒருவர் சட்டத்தரணி போன்று நடித்து சந்தேக நபரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்வதற்கு சந்தேக நபர் தயாரான போது கைது செய்யப்பட்டுள்ளார்.



கைது செய்யப்பட்டவர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சுமார் 50 மில்லியன் ரூபாய் பணம் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug10

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்ச

Feb03

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்த

Jul04

மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் ச

Jan18

இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்ட

Jan24

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடி

May28

யாழ்.போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அ

Oct21

வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியா

Sep19

ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத

Jan22

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிந்தபோத

Jan20

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங

Jan30

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு

Sep22

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்

Mar13

அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்

May11

பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி

Jan24

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த