More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கள்ளக்காதலியுடன் வந்த கணவர் - கத்தியால் குத்தி கிழித்த மனைவி
மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கள்ளக்காதலியுடன் வந்த கணவர் - கத்தியால் குத்தி கிழித்த மனைவி
Mar 08
மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கள்ளக்காதலியுடன் வந்த கணவர் - கத்தியால் குத்தி கிழித்த மனைவி

கோவை மாவட்டம், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. நாராயணசாமி தச்சுதொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது.



நாராயணசாமிக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்திருக்கிறது.



இந்நிலையில், நேற்று முன்தினம் மூத்த மகன் ராஜ்குமாரின் மனைவிக்கு நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவில் மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.



அப்போது, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு நாராயணசாமி, கள்ளக்காதலியை அழைத்து வந்துள்ளார். இதைப் பார்த்ததும் ராஜேஸ்வரி ஆத்திரம் அடைந்தார்.



இதைப் பார்த்த மகன் ராஜ்குமாரும் நாராயணசாமியிடம் வாக்குவாதம் செய்து திட்டி தீர்த்து அடிக்கச் சென்றுள்ளார். இதனால், உடனடியாக அங்கிருந்து கிளம்பிய நாராயணசாமி வீட்டிற்கு சென்றார்.



இதனையடுத்து, மனைவி ராஜேஸ்வரியும், மகன் ராஜ்குமாரும் வீட்டிற்க்கு வந்தனர். அப்போது, ராஜேஸ்வரியும், ராஜ்குமாரும் நாராயணசாமியிடம் மீண்டும் சண்டையிட்டனர். இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காத நாராயணசாமி அசால்ட்டா இருந்துள்ளார்.



அப்போது, ஆத்திரம் அடைந்த ராஜேஸ்வரியும், ராஜ்குமாரும் அருகில் இருந்த அரிவாளை எடுத்து நாராயணசாமியை சரிமாரியாக குத்தி வயிற்றை கிழித்தனர். அலறி துடித்த நாராயணசாமி மயங்கி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.



இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் நாராயணசாமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் நாராயணசாமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.



இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.



கணவனை அரிவாளால் வெட்டிய மனைவியையும், மகனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கணவனை மனைவியும் மகனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar14

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த

Jun03

முதல்-அமைச்சர்  

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர

Feb09

இந்தியாவின்   கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம

Feb26

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது

May13

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இத

Mar12

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்

Jul14

மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக

Apr03

மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக

Oct09

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த

Jan26

இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தம

Jan20

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற

Sep08

மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்

Jan31

வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா

Jul25

புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான