More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு:
கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு:
Jun 01
கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு:

நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.



அதன்படி குறித்த இருவரும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ள நிலையில் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது. 



திடீரென உயிரிழப்பு



கடந்த 30ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி காரில் நான்கு பேர் பயணித்துக் கொண்டிருந்த போது அதில் இருவருக்கு மன்னார் - உயிலங்குளம் பகுதியில் வைத்து திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது.



கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல் (Photos)



 



இந்த நிலையில் குறித்த இருவரும் அதே வாகனத்தில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



சம்பவத்தில் பேசாலையைச் சேர்ந்த எம்.பிரதீப் (வயது 26) மற்றும் காட்டாஸ்பத்திரியை சேர்ந்த எம்.மசூர் (வயது 35) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



பிரேத பரிசோதனை



குறித்த இரு சடலங்களும் மன்னார் வைத்தியசாலையில் இருந்து நேற்று பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல் (Photos)



 



இதன்போதே மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியமையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr06

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று

Mar14

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந

Apr15

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Feb17

கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR

Feb22

கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ

Jan19

நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத

Apr03

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா

Aug13

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில்

Oct03

யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வ

Mar31

சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்ச

Jun03

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மற

Aug27

இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொ

Oct03

கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படு

Jul04

யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தி

Jan19

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ