More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • முஹம்மது நபி தொடர்பில் சர்ச்சை பேச்சு! இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள சங்கட நிலை!
முஹம்மது நபி தொடர்பில் சர்ச்சை பேச்சு! இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள சங்கட நிலை!
Jun 06
முஹம்மது நபி தொடர்பில் சர்ச்சை பேச்சு! இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள சங்கட நிலை!

முஹம்மது நபியைப் பற்றி சர்ச்சை



முஹம்மது நபியைப் பற்றி இந்திய ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால், கோபமடைந்த இஸ்லாமிய நாடுகளை சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.



இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, கடந்த மாதம் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் வெளியிட்ட கருத்தே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



முஹம்மது நபி தொடர்பில் சர்ச்சை பேச்சு! இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள சங்கட நிலை!



இந்திய- சவூதி அரேபிய தலைவர்கள்



இடைநிறுத்தம்



 



அதே நேரத்தில் கட்சியின் புதுடெல்லி பிரிவின் ஊடக பேச்சாளரான நவீன் ஜிண்டாலின் ட்விட் பதிவு ஒன்றும் சர்ச்சையை ஏற்படுத்தியது



இந்த கருத்துக்கள், இந்திய நாட்டின் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை கோபப்படுத்தியதுடன் சில மாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.



இதனையடுத்து பாரதீய ஜனதா கட்சி, நுபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்ததுடன் ஜிண்டாலை கட்சியில் இருந்து வெளியேற்றியுள்ளது.



முஹம்மது நபி தொடர்பில் சர்ச்சை பேச்சு! இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள சங்கட நிலை!



நுபுர் ஷர்மா



கட்சியின் நிலைப்பாடு



 



எந்தவொரு மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது.



எந்தவொரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் பாஜக எதிரானது என்று கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.



குவைத், கட்டார் மற்றும் ஈரான் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. சவூதி அரேபியாவும் இன்று தமது எதிர்ப்பை தெரிவித்தது.



இதில், இந்தியாவிடமிருந்து பகிரங்க மன்னிப்பை கட்டார் கோரியுள்ளது.



அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் நிலைப்பாடு



 



இந்த விவகாரத்தில் பாரதீய ஜனதாக் கட்சி மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைமைகள் பகிரங்க அறிக்கைகளை வெளியிட வேண்டியிருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



அப்படிச் செய்யாவிட்டால், அரபு நாடுகளுடனும் ஈரானுடனும் இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.



இந்தியாவும் இஸ்லாமிய நாடுகளும்



 



குவைத், கத்தார், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபையுடன் இந்தியாவின் வர்த்தகம் 2020-21ல் 87 பில்லியன் டொலராக இருந்தது.



அத்துடன் மில்லியன் கணக்கான இந்தியர்கள் இந்த நாடுகளில் வாழ்கிறார்கள் மற்றும் வேலை செய்கிறார்கள்



மற்றும் மில்லியன் கணக்கான டொலர்களை வீட்டிற்கு அனுப்புகிறார்கள்.



இந்தியாவின் எரிசக்தி இறக்குமதிக்கான முக்கிய ஆதாரமாகவும் இந்த நாடுகள் விளங்குகின்றன.  



முஹம்மது நபி தொடர்பில் சர்ச்சை பேச்சு! இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள சங்கட நிலை!






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr02

ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு

Apr28

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிக

Jun26

பள்ளி கல்வி

Apr20

கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங

Jan31

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிந்

Mar25

தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய

Apr17

சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

Aug15

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ

Jun02

முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந

Aug01

புதுச்சேரியில் தினசரி கொரோனா  பரவல் 100-க்கு கீழ் குறை

Mar29

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா

Mar24

நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு

Aug27

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட காஞ்சிபுரம

Aug12

சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள

Jul25

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமை