More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மொபைல் கேம் விளையாடுவதைத் தடை செய்த தாயார்; சிறுவன் அரங்கேற்றிய கொடூரம்!
மொபைல் கேம் விளையாடுவதைத் தடை செய்த தாயார்; சிறுவன் அரங்கேற்றிய கொடூரம்!
Jun 09
மொபைல் கேம் விளையாடுவதைத் தடை செய்த தாயார்; சிறுவன் அரங்கேற்றிய கொடூரம்!

  இந்தியாவின் உத்தர்ப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மொபைல் கேம் விளையாடுவதைத் தடை செய்த தனது தாயைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அத்தோடு நிற்காமல், தனது நண்பர்கள் இருவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, ஒன்லைனில் முட்டை கறியை ஓர்டர் செய்து அனைவரும் சேர்ந்து உண்டு விட்டு, “புக்ரே” என்ற திரைப்படத்தையும் பார்த்து இரசித்துள்ளனர்.



வீட்டிற்கு வந்த நண்பர்கள் அவரது தாயாரைப் பற்றி விசாரித்தபோது, அவர் தனது அத்தையின் வீட்டில் இருப்பதாக பொய் கூறியுள்ளான். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.



மேலதிக விசாரணையில் பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். “தன்னை பப்ஜி போன்றதொரு மொபைல் கேம்-ஐ விளையாட அனுமதிக்காத, தன் தாயிடம் கோபமடைந்த அவன், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தன் தந்தையிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கியால் தாயாரை சுட்டுக் கொன்றதாக கூறினான்”.





தொடர்ந்து, தாயாரின் உடலை ஒரு அறைக்குள் தள்ளிவிட்டு, தனது தங்கையை மற்றொரு அறையில் வைத்து பூட்டி இரண்டு நாட்கள், அவன் தனது தாயின் சடலத்துடன் வீட்டில் தங்கியிருக்கிறான்.



அதன்பின்னர் துர்நற்றம் வீச தொடங்கியதால், ரூம் ஸ்பிரே அடித்துள்ளான். ஆனால், இதையும் மீறி, இறந்த உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.





குறித்த சிறுவன், தனது தாய் மற்றும் 10 வயது சகோதரியுடன் அவனுடைய வீட்டில் வசித்து வந்தான். அவனுடைய தந்தை ஒரு இராணுவ அதிகாரி என்றும் அவர் வங்காளத்தில் பணியமர்த்தப்பட்ட நிலையில், அவருடைய உரிமம் பெற்ற துப்பாக்கி மட்டும் வீட்டில் வைத்துவிட்டுச் சென்ற நிலையில் அந்த துப்பாக்கியால் சிறுன் இந்த கொடூர சம்பவத்தை அரகேற்றியதாக கூறப்படுகின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May24

கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட

Mar16

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்

Jul04

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற

Jun02

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ

Feb08

15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத

Sep28

தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்த

May03

பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்

Mar03

இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக

Feb07

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம

Jun30

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ

Apr27

இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற்

Apr03

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர்

Feb06

இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும்

Jan18

தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்

Feb07

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதி