More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இராணுவ ஆட்சிக்குள் நாடு சென்று விடக்கூடாது! அமைச்சர் வாசுதேவ முன்னெச்சரிக்கை
இராணுவ ஆட்சிக்குள் நாடு சென்று விடக்கூடாது! அமைச்சர் வாசுதேவ முன்னெச்சரிக்கை
Apr 03
இராணுவ ஆட்சிக்குள் நாடு சென்று விடக்கூடாது! அமைச்சர் வாசுதேவ முன்னெச்சரிக்கை

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இராணுவ ஆட்சிக்கு வித்திட கூடாது என்பதற்காகவே அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை கோருகிறோம்.



மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பது நடைமுறை தீர்மானங்கள் ஊடாக விளங்குகிறது என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.



அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் 'காபந்து அரசாங்கம்' அமைப்பது குறித்து ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.



அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் கடுமையாக கிளர்த்தெழுந்துள்ளது. எனது அரசியல் அனுபவத்தில் தற்போதைய நிலைமையினை முன்னொருப்போதும் காணவில்லை.



அரச தலைவருக்கு எதிராக நாட்டு மக்கள் இதற்கு முன்னர் இவ்வாறு வீதிக்கிறங்கவுமில்லை. பொருளாதார நெருக்கடியினை அரசாங்கம் வேண்டுமென்றே தீவிரப்படுத்தியுள்ளது.



அரசாங்கத்தில் முக்கிய பதவியை வகிப்பவர்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தி, நாட்டு மக்களை வீதிக்கிறக்கி தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இருந்துக் கொண்டு செயற்பட்டதன் பெறுபேறு தற்போது மக்கள் போராட்டமாக வெளிப்படுகிறது.



நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் செயற்படுத்தவுமில்லை,செயற்படுத்துமாறு பரிந்துரைத்த தீர்மானங்கள் குறித்து அவதானம் செலுத்தவுமில்லை.



ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் மீண்டும் ஆட்சிமாற்றத்திற்காக வீதிக்கிறங்கியுள்ளார்கள். ஜனநாயக போராட்டம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனநாயக தன்மையிலான தீர்மானத்தை பெற்றுக்கொடுக்கும் என கருத முடியாது. தற்போது இராணுவ ஆட்சி நிலவும் நாடுகளில் ஆரம்பக்கட்ட போராட்டம் ஜனநாயக ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.



 



இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியிலான போராட்டம் இராணுவ ஆட்சிக்கு வித்திட கூடாது என்பதற்காகவே இடைக்கால அரசாங்கத்தை கோரியுள்ளோம். மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதை தற்போதைய தீர்மானங்கள் ஊடாக விளங்கிக்கொள்ள முடிகிறது.



நாட்டு மக்கள் தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்யும் வரை இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே புத்திசாலித்தனமான தீர்மானமாகும். மக்களின் போராட்டம் தீவிரமடைந்தால் அது அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில

Feb04

இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என

Sep19

இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னி

Feb03

அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்

Jun16

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த

Jan16

கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குத

Mar08

கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக

Feb05

73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச

Sep23

இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்

Oct06

நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந

May03

இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப

May22

நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய

Mar11

ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக

Jun01

நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள

Jan31

வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத