More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 7 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பி செலுத்த தயாராகும் அரசாங்கம்! - முக்கிய பிரபலம் தகவல்
7 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பி செலுத்த தயாராகும் அரசாங்கம்! - முக்கிய பிரபலம் தகவல்
Apr 03
7 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பி செலுத்த தயாராகும் அரசாங்கம்! - முக்கிய பிரபலம் தகவல்

நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள நிலையில், 7 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பி செலுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.



அரசாங்கம் இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,



“இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்க முடியாத காரணத்தினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியே இன்று வன்முறையாக மாறியுள்ளது.



அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் மக்கள் நம்பும் அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆனால் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டை தேர்தலுக்கு தள்ள முடியாது என்பதால், நாட்டை குழியில் இருந்து மீட்க இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்.



கடந்த இரண்டு வருடங்களில் செய்ய வேண்டியதைச் செய்யாததன் விளைவுகளைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். ஆனால் அரசாங்கம் இன்னும் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை.



உதாரணமாக இன்று மக்களுக்கு மின்சாரம் இல்லை, எரிபொருளில்லை, மருந்து இல்லை. ஆனால் கடந்த ஏழு நாட்களாக கடனை செலுத்திய அரசாங்கம் நாங்கள் என்று அரசாங்கம் மிகவும் பெருமையுடன் கூறுகின்றது.



மக்களின் அடிப்படைத் தேவைகளை இலங்கை அரசாங்கம் வழங்கத் தவறியமை நாட்டுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தியிருப்பதை இன்று முழு உலகமும் அறியும். எனவே, கடனை செலுத்த முடியாத நிலையில் இலங்கை இருப்பதை உலகமும் புரிந்து கொண்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb03

கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289

Jan11

கொழும்பில் நேற்றைய தினம் வெவ்வேறு பகுதிகளில் மூன்று ச

Feb20

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம

Mar28

ஐ.நா. மனித உரிமைகள் சபையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மான

Jun12

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்

Sep26

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்

Mar10

அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு

Feb02

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச

Nov23

யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை

Sep21

மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற

Oct01

எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்

May02

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ

Mar02

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளிய

Sep23

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Jul20

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்