More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க கோத்தபய சம்மதம்!
இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க கோத்தபய சம்மதம்!
Apr 26
இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க கோத்தபய சம்மதம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறது.



இதற்கிடையே இலங்கையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்சே, மாற்று கருத்து உடையவர்களால் இடைக்கால அரசாங்கம் அமைப்பதால் எந்த பலனும் கிடைக்காது என்றும் ஒருவேளை இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே தலைவராக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.



இந்த நிலையில் இலங்கையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக அஸ்கிரிய பீடத்தின் ஆவண காப்பாளர் கலாநிதி மெதகம் தம்மானந்த தேரர் கூறும்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து, சமீபத்தில் புத்தமத குருமார்கள் அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அந்த கடிதத்திற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதில் அனுப்பினார்.



அதில், “இடைக்கால அரசாங்கத்தை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதுடன், பொருளாதார பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதாகவும் பதில் வழங்கிஉள்ளார். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இடம் பெறும் கலந்துரையாடல்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.



அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்களை நடத்தி அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



இந்த நிலையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆதரவு உள்ளது என்று முன்னாள் அமைச்சரும், அதிருப்தி எம்.பி.யுமான உதயகம்மன்பில தெரிவித்தார்.



அமைச்சர் பதவியில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவால் நீக்கப்பட்ட உதய கம்மன்பில கூறும்போது, “ஐக்கிய மக்கள் சக்தி கட்சியால் கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 113 உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்கும் வரை காத்திருக்குமாறு கூறினோம். தற்போது எங்களிடம் 120 பேரின் ஆதரவு உள்ளது.



பதவியில் இருந்து விலக பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 



இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தரப்பில் கூறும்போது, “பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு இன்னும் பெரும்பான்மை பலம் இருப்பதால் பதவியை ராஜினாமா செய்வதற்கான சூழல் இல்லை. பிரதமருக்கு எதிராக 120 பாராளுமன்ற உறுப்பினர்களை தயார்படுத்தி இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன

Sep21

வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா

Feb24

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உ

Sep05

உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும்

Mar13

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு

Feb11

ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில

Oct22

அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8

Mar14

பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வ

Mar09

வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ

Mar29

இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட

Jan23

நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ

Mar26

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேட

Mar29

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்

Jan24

ஜனவரி 27ஆம் திகதி தடுப்பூசிகளை பெற்ற பின்னர் 28ஆம் திகதி

Jan11

சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்க