More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்
கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்
May 02
கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 



இந்த நிலையில் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 





கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்களுடன் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டு வந்த மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.



இதனை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், எங்களை சுடுவதற்காகவா இங்கு வந்தீர்கள், முடியுமானால் எங்களை சுட்டுத்தள்ளுங்கள் என தமது பலத்த எதிர்ப்பினை காட்டி பொலிஸாரை அங்கிருந்து அனுப்பும் முயற்சியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். 





அத்துடன் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் பொலிஸார் பலர் பாதுகாப்பு கடமைக்காக வந்துள்ளதுடன், தற்போது போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



23 நாட்களாக ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலானது போராட்டக்காரர்களின் முற்றுகைக்குள் இருக்கின்றது.



இந்த நிலையில் பொலிஸாரின் இந்த திடீர் செயற்பாடுகள் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மத்தியில் குழப்ப நிலையையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. 



ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில் பகுதியில் போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டுள்ள மேடையை அகற்றுமாறே பொலிஸார் போராட்டக்காரர்களிடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. 



இதேவேளை பொலிஸார் அங்கு பொல்லுகள், தடிகளுடன் களமிறங்கியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்ததுடன், கண்ணீர்ப்புகை வாகனம் மற்றும் ஒரு தரப்பு பொலிஸார் போராட்டக்காரர்களின் எதிர்ப்பினால் அங்கிருந்து சென்றுள்ள நிலையில், மற்றுமொரு தொகுதியினர் அப்பகுதியிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 





மேலும், அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலிமுகத்திடலில் 23ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Gallery Gallery Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
May13

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தனது கடமைகளை

Oct14

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த

Mar17

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின

Feb06

நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல

Mar08

தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனால் கிடைப்ப

Mar30

இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற

Jan20

கொரோனா தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசே

Apr02

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட

Apr02

நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்

Sep03

யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப

Sep24

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவி

Mar03

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (மார்ச் 04) மதியம் 02:00 மணி

Oct05

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா

Jun02