More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை..!
தமிழ் அரசியல் கைதிகள்  விடுதலை..!
Oct 20
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை..!

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்றனர்.



இவர்களை விடுதலை செய்கின்றமைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கும் நாடாளுமன்றத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நன்றி தெரிவித்தார்.



அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 8 பேரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறினார்.



'இவர்களின் விடுதலை தொடர்பாகச் சிறைச்சாலை திணைக்களத்தினரிடம் நான் தொடர்பு கொண்டபோது குறித்த 8 பேரை விடுவிப்பதற்கான கடிதம் கிடைத்திருக்கின்றது எனவும், 8 பேரும் தீபாவளி தினத்தன்று விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் அவர்கள் அறிவித்தனர்' என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.



அத்துடன் விடுவிக்கப்படுவோரின் பெயர்களையும் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டுள்ளார். அவர்களின் பெயர்கள் வருமாறு,



01) வரதராஜன்



02) ரகுபதி சர்மா



03) இலங்கேஷ்வரன்



04) நவதீபன்



05) ராகுலன்



06) காந்தன்



07) சுதா



08) ஜெபநேசன். ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr09

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப

May27

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை ம

Feb23

இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறு

Jan12

 ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக

Jul26

சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை&n

May15

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக மத்தி

Mar03

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த

Sep07

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ

May02

இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ

Sep26

சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட

Oct08

கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ

Oct05

முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட

Feb04

நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப

Feb07

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒர

Mar18

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்