More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையின் கடனை மறுசீரமைக்க உதவும் அமெரிக்கா
இலங்கையின் கடனை மறுசீரமைக்க உதவும் அமெரிக்கா
Sep 07
இலங்கையின் கடனை மறுசீரமைக்க உதவும் அமெரிக்கா

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் (Janet Yellen) தெரிவித்துள்ளார்.



இதற்காக அனைத்து கடன் வழங்குனர்களுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சரியான நேரத்தில் பங்கேற்பது மற்றும் சமனான சுமை பகிர்வு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அமெரிக்க திறைசேரி சுட்டிக்காட்டிள்ளது.



இலங்கையின் கடன் வழங்குனர்களிடையே உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை வரவேற்றுள்ள அமெரிக்க திறைசேரி, இது தொடர்பான ஈடுபாட்டை வலியுறுத்தியுள்ளது.



நிதி தொடர்பான உத்தரவாதங்களை விரைவுபடுத்துவது என்ற பொதுவான இலக்கிற்காக இலங்கையுடன் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இச்செயன்முறையில் பங்கெடுத்துள்ள பரிஸ் கிளப்பின் ஏனைய உறுப்பினர்களுடனும் அதே இலக்கிற்காக இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.



இதுவேளை இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக அவர்களின் ஏனைய அரச முகவர் அமைப்புக்களான உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் தொடர்ந்து செயற்படுவதாகவும் அமெரிக்க திறைசேரி உறுதியளித்துள்ளது.



மேலும் அமெரிக்காவால் இலங்கை மக்களுக்கென வழங்கப்பட்ட பாடசாலை சிறுவர்களுக்கான போஷாக்கு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான உணவு கூப்பன்கள், உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட உரம் மற்றும் நிதியுதவி தொடர்பிலும் அமெரிக்கா நினைவுகூர்ந்துள்ளது.



அண்மையில் இடம்பெற்ற அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையின் ஊடாக நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை அமெரிக்க திறைசேரி வரவேற்றுள்ளது.



அமெரிக்க திறைசேரி செயலாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar03

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற

Jan28

புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி

Mar16

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30,000 இலங்கை

Feb15

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ

Jul07

கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப

Sep17

உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க

Sep26

சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட

Jan26

72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள

Jul17

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை

Sep23

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச ந

Jan29


சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப

Oct22

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந

May15

சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி

Oct04

சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள

Feb03

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்த