More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அமைதியாக நினைவேந்த முடியும் – தினேஷ் குணவர்த்தன
அமைதியாக நினைவேந்த முடியும் – தினேஷ் குணவர்த்தன
Sep 16
அமைதியாக நினைவேந்த முடியும் – தினேஷ் குணவர்த்தன

யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.



தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த திலீபனின் 35 ஆவது ஆண்டு நிவைவேந்தல் நிகழ்வு நேற்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.



இந்தநிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.



கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும்போது இன ரீதியானஇ மொழி ரீதியானஇ மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.



நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.



அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



அதேவேளைஇ தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் கொடிகளைப் பயன்படுத்தியோ அல்லது அந்த அமைப்புக்களுக்கு  புகழாரம் சூட்டியோ நினைவேந்தல் நிகழ்வுகளைக் கடைப்பிடிக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.



அவற்றை மீறினால் சட்டங்களுக்கமைவாகவே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை கள

Mar12

எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப

Feb06

இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகர

Sep25

2022 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொ

Jul15

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதன

May03

நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழ

Feb11

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக

Oct17

இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில

Sep23

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Oct25

கோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற

Dec14

இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல

Jan22

தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின

Aug25

வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 ப

Jul22

கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக

Oct01

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளு