More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக வடக்கு-தெற்கில் உள்ள மக்கள் ஒன்றிணைவது பாரிய வெற்றி: சுமந்திரன்!
யங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக வடக்கு-தெற்கில் உள்ள மக்கள் ஒன்றிணைவது பாரிய வெற்றி: சுமந்திரன்!
Sep 23
யங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக வடக்கு-தெற்கில் உள்ள மக்கள் ஒன்றிணைவது பாரிய வெற்றி: சுமந்திரன்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான தனது சகல முயற்சிகளிலும் தோல்வியடைந்து வருவதாகவும் இறுதியாக வடக்கில் உள்ள மக்கள் தெற்கில் உள்ள தமது சகோதரர்களுடன் கொடூரமான சட்டத்தை நீக்குவதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



காலிமுகத்திடலில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக கையொப்பமிடும் நிகழ்வில் கலந்துகொண்ட அவர், இது ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பெற்ற மகத்தான வெற்றி என தெரிவித்துள்ளார்.



கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 இல் ஒரு தற்காலிக விதிகள் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் ஆனால் அது நான்கு தசாப்தங்களாக தொடர்ந்து நீடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் வாயை அடைக்க எப்போதும் பயன்படுத்தப்படும் இந்த மனிதாபிமானமற்ற சட்டத்திற்கு எதிராக மக்கள் திரள வேண்டிய நேரம் இது  என்றும் அவர் கூறியுள்ளார்.



இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இளைஞர் முன்னணியுடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் காங்கேசன்துறையில் ஆரம்பிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கும் பிரசாரம்இ நேற்று கொழும்பை வந்தடைந்ததுடன் காலிமுகத்திடலில் பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.



மேலும் தெற்கே ஹம்பாந்தோட்டை வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ள இந்த பிரசாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கையொப்பங்கள் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் இதுவரை சுமார் 500000 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.



எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun03

இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52

Jun03

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்க

Feb28

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில்  பி

Mar08

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம

Apr05

புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து, சட்டத்தி

Sep26

புலம்பெயர் நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்

Feb06

லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய

Feb01

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய

Jan26

பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை

Jul26

வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம

Jan13

பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த

Feb10

பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை

Oct25

தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத

Oct17

அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதர

Feb02

பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி