More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொருளாதார நெருக்கடியால் சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
பொருளாதார நெருக்கடியால் சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
Sep 24
பொருளாதார நெருக்கடியால் சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது என தெரிவித்து  சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.



குறிப்பாக யாழ்ப்பாணத்திலையே அதிகளவான பிள்ளைகளை சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பெற்றோர் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



வடக்கில் 2021 ஆம் ஆண்டு 158 பிள்ளைகள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டின் அரையாண்டு கால பகுதிக்குள் 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இதேவேளை யாழ்.மாவட்டத்தில் 124 பேரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 62 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 45 பேரும் , மன்னார் மாவட்டத்தில் 07 பேரும் வவுனியா மாவட்டத்தில் 08 பேருமாக 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.



மேலும் பெற்றோரின் பொருளாதார நிலைமைகளை அறிந்து உண்மையில் அவர்களால் பிள்ளைகளை பராமரிக்க முடியாதா என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறுவர் இல்லங்களில் பிள்ளைகளை சேர்க்க அனுமதிப்போம் எனவும் வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் இ.குருபரன் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல

Sep26

சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட

May12

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ

Oct24

போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க

Jan16

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வ

Feb15

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க

Oct25

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்

Feb05

இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றா

Sep26

பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களி

Mar01

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் ச

Aug08

சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி

Jul25

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்

Oct04

சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்த

Sep15

பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப

Mar11

ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக