More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்!
மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்!
Sep 25
மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்!

சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.



இதன்படி ஒரு கல்வி வலயத்தில் இருந்து 30 பேர் என நாடு முழுவதிலும் உள்ள 99 வலயங்களைச் சேர்ந்த 2970 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



புலமை பரில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5000 உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



ஒவ்வொருமுறையும் சாதாரண தரப் பரீட்சை வெளியாகி, க.பொ.த உயர்தரம் ஆரம்பமாக முன்னர் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் பத்திரிகை ஊடக விளம்பரப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



இந்த திட்டம் தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug06

வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்

Oct06

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்

Mar09

இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இரு

Nov05

வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்ற

May19

கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீ

Jul15

வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ

Feb26

உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத

Jan27

வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட

Mar12

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ந

Sep21

தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள

Aug14

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொ

Feb04

தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என

Sep22

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்

Apr12

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம

Mar02

ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச