More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • விடுதலைப் புலிகள் அமைப்பை தடை பட்டியலிலிருந்து நீக்கக் கோரி மனு!
விடுதலைப் புலிகள் அமைப்பை தடை பட்டியலிலிருந்து நீக்கக் கோரி மனு!
Mar 09
விடுதலைப் புலிகள் அமைப்பை தடை பட்டியலிலிருந்து நீக்கக் கோரி மனு!

இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளை அமைப்பை நீக்கவேண்டும் என்று கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி ருத்ரகுமாரன், இந்திய உள்துறை அமைச்சுக்கு இது தொடர்பிலான விண்ணப்ப கடிதத்தை  அனுப்பியுள்ளார்.



இதில் தமிழீழ விடுதலைப்புலிகளை ஏன் இந்தியாவின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்பதற்கான நியாயங்கள் கூறப்பட்டுள்ளன.



2019ஆம் ஆண்டு முதல் இந்த கோரிக்கையை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்து வருவதாக ருத்ரகுமாரன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்



தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைக் காரணமாக, இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பணியாற்றுவதில் சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்த விண்ணப்பக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



நிபுணரின் அறிவிப்புகளின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப்புலிகள் தற்போது எந்தவொரு நிறுவன கட்டமைப்பான அமைப்பையும், எந்தவொரு நிறுவன கட்டமைப்பையும் கொண்டிருக்கவில்லை என்பது இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கான காரணமாக, பிராந்தியத்திற்கும் இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கும் அச்சுறுத்தல் என்ற விடயத்தை இந்தியா, வலியுறுத்தி வருகின்றபோதும், அதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது மனுவில் மறுத்துள்ளது.



இந்தநிலையில் தமிழ்மக்களின் அபிலாசைகளை முன்னெடுக்க இந்தியாவின் ராஜதந்திர உதவி அவசியம் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனுவில் கோரப்பட்டுள்ளது.



இதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கை, இந்திய மக்களின் ஒருமைப்பாட்டையும், பிராந்திய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது.



அத்துடன் தமிழீழம் இந்தியாவுடன் சிறப்பான உறவை கொண்டிருக்கும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப

Sep12

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட

Apr02

இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி

Jan22

தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின

Jan25

ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு

Jan20

தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தி

Jan29

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதிய

Jan16

இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தின் பிரதான வருமான

Mar27

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர

May02

இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது

Mar07

 நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்று

Sep27

அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன

Mar12

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று

Oct15

நிதி மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சந்தே

May09

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா