More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
Jan 19
பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகியது.



சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த சந்தை வளாகத்தின் கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றன.



கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவின் வழிப்படுத்தலுக்கு அமைய அந்த அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் இதன் கட்டுமான பணிகளை முன்னெடுக்கின்றது.



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் 14 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.



எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது இவ்வேலைத்திட்டத்தின் பணிகள் முழுமையாக கைவிடப்பட்டன.



இச்சந்தை வளாகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நுகர்வோருக்கு கட்டுமானத் துறையின் அனைத்து மூலப்பொருட்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.



இதேவேளை, சந்தை வளாகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம் CCity.lk நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பல கடைகளும் நேற்று உத்தியோகபூர்வமாக கடை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.



கொடுப்பனவுகள் தாமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் தேசிய இயந்திர நிறுவனத்தில் சேவையிலிருந்து விலகியிருந்த 50 ஊழியர்களுக்கு ரூ.233 இலட்சம் மதிப்பிலான உபகாரத்தொகை வழங்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்தே தேர்த ல்

Sep16

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்

May20

அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொ

Jan28

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ

Jan27

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர

Feb08

எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப

Jan25

மேல் மாகாணத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி ச

Mar30

தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்

Jan19

 திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை

Sep21

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய ந

Jan29

 அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்

Feb16

பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர

May18

  கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்த

Mar29

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழ

Mar31

நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களி