More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழப்பு!
Jan 20
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



கொழும்பு 06, அரநாயக்க மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



அரநாயக்க பகுதியை சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.



இதனையடுத்து அநுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்தார்.



அவரது மரணத்திற்கான காரணம் கொரோனா நியுமோனியாவில் தீவிரமடைந்தமை சுவாசத் தொகுதி தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதேநேரம், கொழும்பு 6 பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கொரோனா தொற்று உறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.



இதனையடுத்து நெவில் பெர்ணான்டோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்தார்.



அவரது, மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்றால் ஏற்பட்ட இதய நோய் நிலைமையாகும் என குறிப்பிடப்படுகிறது.



இதேவேளை, மாளிகவாத்தை பகுதியை சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்தார்.



கொரோனா தொற்றால் சுவாசப்பை செயலிழந்தமையே அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கை தெரிவித்துள்ளது.



இதற்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது.



இதேவேளை நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் 660 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May25

சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒரு

Sep17

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின்

Jan26

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச

Oct14

நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இ

Oct06

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம

Apr01

கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிப

Feb01

கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீத

Aug31

இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப

Jan25

இவ்வருடம் உள்நாட்டு பால் உற்பத்தி 70 % ஆக அதிகரிக்கப்பட

Feb09

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் க

Jan27

லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா

May24

கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்

Feb11

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ

Feb06

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ

Aug07

நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணி