More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • திருகோணமலையில் உழுந்து, பப்பாசி மற்றும் நிலக்கடலை அறுவடை!
திருகோணமலையில் உழுந்து, பப்பாசி மற்றும் நிலக்கடலை அறுவடை!
Jan 22
திருகோணமலையில் உழுந்து, பப்பாசி மற்றும் நிலக்கடலை அறுவடை!

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவின் கும்புறுப்பிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவில் பயிரிடப்பட்ட உழுந்து, பப்பாசி மற்றும் நிலக்கடலை அறுவடை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள தலைமையில் நடைபெற்றது.



அத்துடன் இப்பிரதேசத்தில் பப்பாசி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதையும் அரசாங்க அதிபர் களத்திற்கு சென்று மேற்பார்வை செய்ததுடன், பிரதேச விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு சாதகமான பதில்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.



குறித்த பகுதியில் உரிய வடிகாண்கள் இன்மையால் பயிர்ச்செய்கை பாதிக்கப்படுகிறது. பாரம்பரியமாக செய்கை பண்ணப்பட்டு வந்த காணிகளை மீண்டும் பயிரிட அனுமதி தருமாறும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு சந்தைவாய்ப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுத்து தருமாறும் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.



வடிகான்களை புனர்நிர்மாணம் செய்ய 10 இலட்சம் ரூபாயை ஒதுக்குவதாகவும் பாரம்பரியமாக செய்துவந்த பயிர்ச்செய்கை நிலங்களை பயிர்செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.



அத்துடன் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான சந்தைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான இணைப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இதன்போது அரசாங்க அதிபரால் கவனம் செலுத்தப்பட்டது.



கிராமிய உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பாக தற்போது இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களில் மாவட்டத்தில் உற்பத்தி செய்ய முடியுமான பொருட்களை விருத்தி செய்வது தொடர்பில் விரைவில் உரிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் இதன் மூலம் உயரிய நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இந்நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், குச்சவெளி பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் லவகுசராசா, அதிகாரிகள், பிரதேசவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக

Oct26

சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இ

Feb12

2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவ

May04

இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக

Apr13

யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ

Jul30

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக ம

Aug21

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மு

Sep28

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து இன்று பில

Sep03

நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ச

Feb04

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப

Mar20

இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய

Mar26

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா

Mar02

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல

Mar12

வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட

May15

மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக