More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • திருமலை கடலில் பாறையில் மோதிய நிலையில் சரக்கு கப்பல்
திருமலை கடலில் பாறையில் மோதிய நிலையில் சரக்கு கப்பல்
Jan 25
திருமலை கடலில் பாறையில் மோதிய நிலையில் சரக்கு கப்பல்

அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டு கப்பலான எம்.வி. யுரோசன் திருகோணமலை துறைமுகத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறை ஒன்றில் மோதிய நிலையில் சிக்குண்டுள்ளது.



கப்பலில் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33,000 மெற்றிக் தொன்னும் 720 மெற்றிக் தொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கப்பலை நகர்த்தும் பணிகளில் இலங்கை கடற்படையினரும் கரையோர பாதுகாப்பு அதிகார சபையும் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியா நாட்டுக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எம்.வி. யுரோசன் சரக்குக் கப்பல் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி அபூதாபியிலிருந்து சீமெந்துக்கான திரவப் பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களுடன் இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தை நோக்கி பயணமாகியுள்ள நிலையிலேயே நேற்று நண்பகல் சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் ஆழமற்ற நீரோட்டத்தில் பயணித்த நிலையில் சுண்ணாம்பு பாறைகளில் மோதியுடன் கப்பலின் கீழ் தளம் பாறை ஒன்றில் சிக்குண்டதனையடுத்து கப்பலை நகர்த்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.



எம்.வி. யுரோசன் கப்பலில் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33,000 தொன்னும், 720 மெற்றிக் தொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் எம்.வி. யுரோசன் கப்பலை நகர்த்தும் கடல் கீழ் மீட்பு முயற்சிகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர். இதன்போது கப்பலின் கீழ் பகுதியில் ஒரு பாகம் கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் கப்பலின் கீழ் பாகத்தில் ஓரளவு சேதமும் ஏற்பட்டுள்ளதையும் இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep28

அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச

Sep29

தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த

Jan22

சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்

Apr29

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ

Feb05

நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த

Feb01

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய

Oct11

நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,

Jan13

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறு

Jan26

நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான

Oct14

இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட

Mar15

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல

May20

மகிந்த ராஜபக்ச தனது 2 பதவிக்காலம் முடிவடைந்ததும் ஓய்வ

Jan26

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அ

Apr20

கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்

Feb07

சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவ