More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பாறையுடன் மோதுண்ட லைபீரியக் கப்பலை மீட்டது இலங்கைக் கடற்படை!
பாறையுடன் மோதுண்ட லைபீரியக் கப்பலை மீட்டது இலங்கைக் கடற்படை!
Jan 25
பாறையுடன் மோதுண்ட லைபீரியக் கப்பலை மீட்டது இலங்கைக் கடற்படை!

அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுகம் நோக்கிச் சென்ற லைபீரியக் கப்பலான எம்.வி.யுரோசன், திருகோணமலைத் துறைமுகத்தை அண்மித்து விபத்துக்குள்ளானது.



திருகோணமலை துறைமுகத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறையொன்றில் மோதி சிக்குண்டுடிருந்த குறித்த கப்பலை இலங்கைக் கடற்படை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் மீட்டுள்ளது.



கப்பலில் சீமெந்து உற்பத்திக்குப் பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33 ஆயிரம் தொன்னும், 720 மெற்றிக் தொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.



மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எம்.வி. யுரோசன் சரக்குக் கப்பல், கடந்த ஜனவரி எட்டாம் திகதி அபுதாபியில் இருந்து சீமெந்துக்கான திரவ பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களுடன் இலங்கையின் திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கிப் பயணமாகியது.



இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பகல் சின்ன இராவணா கோட்டைக் கடற்பரப்பில் ஆழமற்ற நீரோட்டத்தில் பயணித்த நிலையில் சுண்ணாம்பு பாறைகளில் மோதியதுடன் கப்பலின் கீழ் தளம் பாறை ஒன்றில் சிக்குண்டதை அடுத்து கப்பலை நகர்த்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.



இதையடுத்து, நேற்று பிற்பகல் வேளையில் இலங்கைக் கடற்படையினர் குறித்த கப்பலை மீட்டு அந்த இடத்தை விட்டு நகர்த்தியுள்ளனர். இந்நிலையில், கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் த

Oct22

நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்

Mar04

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத

Jan24

ஜனவரி 27ஆம் திகதி தடுப்பூசிகளை பெற்ற பின்னர் 28ஆம் திகதி

Apr11

கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி

Jan19

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந

Mar06

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ

Feb18

இலங்கையில் மேலும் 13 கொரோனா மரணங்கள்- நாட்டில் பதிவாகும

May09

 இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்

May25

கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளு

Jan12

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்

Sep24

கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடை

Aug07

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு

Oct23

சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் சிறைக்கைதிகளின்

Feb02

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி