More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள கருத்து!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள கருத்து!
Feb 01
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள கருத்து!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்கவோ குத்தகைக்கு விடவோ அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



தங்காலையில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “உண்மையில் எதிர்க்கட்சியினர், எம்மீது குற்றம் சுமத்துவதற்கு எதுவுமில்லை.



கிழக்கு முனையத்தை நாம் யாருக்கும் வழங்க மாட்டோம். விற்கவோ, குத்தகைக்கோ வழங்க மாட்டோம். அது எமது கட்டுப்பாட்டிலேயே உள்ளது. தொழிற்சங்கங்களுக்கும் இந்த விடயம் தெரியுமென நான் நினைக்கின்றேன்.



மேலும், விற்பது தொடர்பில் நாம் கலந்துரையாடலைக் கூட நடத்தவில்லை என்பதை நாம் தெளிவாகச் சொல்கின்றோம். எனவே, இதனால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.



அத்துடன் இந்த விடயத்தை முன்னிருத்தி பணிப்பகிஸ்கரிப்பு செய்வதற்கும் ஒன்றுமில்லை. என்னிடம் வந்து கூறினால், நான் உண்மையைத் தெளிவுபடுத்தி இருப்பேன்.



அமைச்சரவையில் 99 வீதமானோர் விற்கக் கூடாது என்ற தீர்மானத்தில் உள்ளனர். தேசிய சொத்துகளையும், வளங்களையும் விற்பது எமது கொள்கை அல்ல.



அது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகும். அக்கட்சியின் கொள்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கல்ல, மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கினர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May20

13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ

Feb09

நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு

Jan16

2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்

Jun17

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்

Sep30

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோ

Apr24

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்கள

May03

ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர

Oct21

மாதாந்தம் 5,000 ரஷ்ய பார்வையாளர்களை ஈர்க்க இலங்கை திட்டம

Sep16

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ

Mar14

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொர

Oct07

தனக்கும்இ சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்ப

Oct11

மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக

Mar09

இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இரு

Aug04

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு

Feb11

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதை