More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாட்டில் கொரோனா தொற்றினால் சிசு உட்பட ஏழு பேரின் மரணங்கள் நேற்று பதிவாகின- முழு விபரம்!
நாட்டில் கொரோனா தொற்றினால் சிசு உட்பட ஏழு பேரின் மரணங்கள் நேற்று பதிவாகின- முழு விபரம்!
Feb 03
நாட்டில் கொரோனா தொற்றினால் சிசு உட்பட ஏழு பேரின் மரணங்கள் நேற்று பதிவாகின- முழு விபரம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 330 ஆக அதிரகரித்துள்ளது.



18 மாத சிசு உட்பட நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏழு பேரின் மரணங்க்ள பதிவாகிய நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.



இதன்படி, கொழும்பைச் சேர்ந்த 18 மாத ஆண் குழந்தை கடந்த பெப்ரவரி முதலாம் திகதி லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தது. மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன், வெலிகம பகுதியைச் சேர்ந்த 67 வயது பெண்ணொருவர் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி இறந்தார். இவர் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததுடன், இவரது இறப்புக்கான  காரணம் கொரோனா தொற்று நிமோனியா மற்றும் மூளையில் இரத்தப் போக்கு என குறிப்பிடப்படுகிறது.



மேலும், கொழும்பைச் சேர்ந்த 82 வயது பெண்ணொருவர் கடந்த 31ஆம் திகதி அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஒரு பக்கவாதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன், வத்தேக பகுதியைச் சேர்ந்த 73 வயது பெண்ணொருவர் கடந்த 31ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவருக்கு கண்டி பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.



இவரது இறப்புக்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா, கடும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என தெரிவிக்கப்படுகிறது.



இதனைவிட, நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய பெண்ணொருவருக்கு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன் பிம்புர மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.



இந்நிலையில், அவர் கடந்த முதலாம் திகதி உயிரிழந்ததுடன் அவரது இறப்புக்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா, இரத்த சோகை, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் எனக் குறிப்பிடப்படுகிறது.



அத்துடன், கெலிஓயாவைச் சேர்ந்த 77 வயது ஆணொருவர் கடந்த முதலாம் திகதி உயிரிழந்தார். இவர் பெரதெனியா போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.



இவரது இறப்புக்கான காரணம், கொரோனா தொற்று நிமோனியா மற்றும் இரத்த விஷமானமை, கடுமையான நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, ராகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணொருவருக்கு ராகம தனியார் வைத்தியசாலையில் கெரோனா தொற்று கண்டறியப்பட்டு, பின்னர் கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.



அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த அவர், கடந்த இரண்டாம் திகதி உயிரிழந்தார். இவரது இறப்புக்கான காரணம் கடுமையான கொரோனா தொற்று நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா என தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07
Jun03

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட

Mar12

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்

Jan30

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு

Oct03

வல்வட்டிதுறை பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கில

Feb17

அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது

Sep09

இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்

Feb26

யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல

Mar21

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ

Jul27

பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய

Mar06

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்

Oct08

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ

Apr06

மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்க

Oct04

பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மில்லியன் பேருக்கு பாட

Mar08

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்