More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 2020 ல் பால்மா இறக்குமதி வீழ்ச்சியால் 50 பில்லியனுக்கும் அதிகமான சேமிப்பு!
2020 ல் பால்மா இறக்குமதி வீழ்ச்சியால் 50 பில்லியனுக்கும் அதிகமான சேமிப்பு!
Feb 06
2020 ல் பால்மா இறக்குமதி வீழ்ச்சியால் 50 பில்லியனுக்கும் அதிகமான சேமிப்பு!

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து பால்மாவை இறக்குமதி செய்யாமல் கிட்டத்தட்ட 50 பில்லியனுக்கும் அதிகமான தொகையை சேமிக்க முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கொரோனா தொற்று பரவல் நிலை காரணமாக கடந்த ஆண்டில், குறைந்த அளவிலான பால்மாவை மட்டுமே இலங்கை இறக்குமதி செய்துள்ள நிலையில் சமீபத்திய சுங்க தரவுகளின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொரோனா தொற்று மனிதகுலத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கத்தை செலுத்தியிருந்தாலும் எதிர்பார்த்ததை விட விரைவில் தேசிய பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும் 2022 ல் இலங்கையில் எந்த பால்மா இறக்குமதி இருக்காது என்றும் அதற்குள் பால்மா துறையில் உள்ள முறையை மாற்றி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறும் என்றும் தெரிவித்துள்ளனர்.



தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, அரச மற்றும் தனியார் பிரிவு விவசாயிகளை இணைத்துக் கொண்டு குறுகிய மற்றும் நீண்ட கால திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த திட்டம் மொத்த உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு எட்டப்பட்ட அதேவேளை சிறு பால் பண்ணையாளர்களின் வருவாயை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.



தற்போது, ​​சிறிய அளவிலான சிறு பால் பண்ணையாளர்கள் தற்போதைய தேசிய பால் உற்பத்தியில் 85% பங்கைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan30

நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து

May18

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச

Apr01

நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தி

May03

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ

Jan19

மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக

Sep30

நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ

Jul21

இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று

Feb02

திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிய

Sep14

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல்

May03

அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம

Jan26

இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட

Oct08

இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமா

Aug31

அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பாரிய நிதி நெருக்கடியின்

Sep27

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆத

Mar03

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (மார்ச் 04) மதியம் 02:00 மணி