More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வாவியில் வீழ்ந்து காணாமல் போனவர் சடலமாக மீட்பு
வாவியில் வீழ்ந்து காணாமல் போனவர் சடலமாக மீட்பு
Feb 06
வாவியில் வீழ்ந்து காணாமல் போனவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி முதலாம் குறிச்சி கடந்த வியாழக்கிழமையன்று (4) வாவியில் வீழ்ந்து காணாமல் போன இளைஞன் இன்று (06) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்னர்.



மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஹிஸ்புல்லாஹ் வீதியைச் சேர்ந்த மீராமுகைதீன் முனாஸ் எனும் 20 வயது இளைஞரே இவ்வாறு வாவியில் விழுந்து காணாமல் போயிருந்தார்.



குறித்த இளைஞன் வாவியில் நிறுத்தப்பட்டிருந்த ஆழ்கடல் மீன்பிடி படகில் காணப்பட்ட வலையை ஒழுங்கு செய்வதற்காக சிறிய தோணி ஒன்றில் படகை நோக்கி சென்று கொண்டிருந்த போது தவறி வீழ்ந்து காணாமல் போயிருந்தார்.



குறித்த இளைஞனை தேடும் பணி இடம்பெற்று வந்த நிலையில் காத்தான்குடி முதலாம் மீனவர்கள் சிலர் இன்று சனிக்கிழமை காலை வாவியின் நடுப்பகுதியில் வைத்து இளைஞனின் சடலத்தை கண்டுள்ளனர்.



இதன் பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எம். இஸ்ஹாக் தலைமையில் பொலிசார் காத்தான்குடி முதலாம் குறிச்சி அல் அக்ஷா மீனவர் சங்க பிரதி நிதிகள் மற்றும் மீனவர்களுடன் படகில் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.



இதையடுத்து சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

மேல் மாகாணத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி ச

Jan28

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்பட

May03

உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்

Jan21

கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி

Jan19

வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய

Aug14

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம

Mar11

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந

Apr01

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிரு

Apr03

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா

Mar02

வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உற

Apr29

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ

Oct25

 

 தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச்

May10

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா

Apr01

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்

Oct17

நாட்டில் நாளை முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படு