More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நிபுணர் குழு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்குக் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர்களைச் சந்திக்கின்றது!
 நிபுணர் குழு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்குக் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர்களைச் சந்திக்கின்றது!
Feb 20
நிபுணர் குழு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்குக் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர்களைச் சந்திக்கின்றது!

புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ச அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்குக் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர்களைச் சந்திக்கின்றது.



இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., பங்களாளிக் கட்சித் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), த.சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) ஆகியோர் பங்குபற்றுவர் எனத் தெரிகின்றது.



புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்றை புதிய அரசு நியமித்திருப்பது தெரிந்ததே.



ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பேராசிரியர் நஸீமா கமர்டீன், சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.சர்வேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி சமன் ரத்வத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்த்தனா, பேராசிரியர் வசந்த ஜெனிவிரத்தை ஏனைய எண்மருமாவார்.



இந்தக் குழுவுக்கு தமிழ்க் கூட்டமைப்பும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான யோசனைத் திட்டத்தைச் சமர்ப்பித்திருந்தது. இந்தக் குழுவையே கூட்டமைப்புத் தலைவர்கள் இன்று சந்தித்து தமது கருத்து நிலைப்பாட்டைத் தெரிவிக்க இருக்கின்றனர்.



இந்த நிபுணர் குழு புதிய அரசமைப்புக்கான தனது நகல் வரைவை இந்த ஆண்டு இறுதிக்கு முன் சமர்ப்பிக்கும் எனக் கூறப்பட்டிருக்கின்றமை தெரிந்ததே.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan24

இலங்கை மின்சார துறையின் தொழிற்நுட்ப பிரிவுகளில் பல ஆண

Oct08

யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

Aug29

தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்

Jan11

திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற

Jun26

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்

Apr19

இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச

Jul18

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ர

Aug21

நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி க

Oct07

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்

Mar27

பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில்

May20

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ

Feb06

அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண

Sep06

கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அம

Jan11

விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சா

Feb02

இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலைய